Thursday, April 28, 2016

திருமலை பௌர்ணமி கருடசேவை

நானேயோ தவம் செய்தேன் 

இராஜ கோபுரம் 

திருமலையில் பிரம்மோற்சவ கருட சேவை மிகவும் பிரசித்தம். அன்று மூலவர் அணியும் லக்ஷ்மி ஹாரம், மகரகண்டி, ஆண்டாள் சூடிக்களைந்த மாலை  அணிந்து மூலவராகவே ஸ்ரீநிவாசப் பெருமாள் கருடசேவை தந்தருளுகின்றார். ஆகவே அன்றைய தினம் லட்சக்கணக்கில் பக்தர்கள் திருமலையில் குழுமுகின்றனர். அன்றைய தினம் பெருமாளை சேவிக்க முடிந்தால் அதுவே மிகுந்த பாக்கியம். 


மத கஜங்கள் முன் செல்கின்றன

கோலாட்டக்குழுவினர் பலர் 


கருட சேவை ஆரம்பம் 

அடுத்து  இரதசப்தமி அன்று பெருமாள் ஏழு வாகனத்தில் அதிகாலையிகிருந்து இரவு வரை  சேவை தந்து அருளுகின்றார் என்பதால் அன்றும் பக்தர் கூட்டம் அதிகமாக இருக்கும். மேலும் கருட சேவை  சமயத்தில் திருமலையில் இருந்தால்தான் பெருமாளை கருடனில் சேவிக்க முடியும். 


இராஜகோபுரத்திற்கு எதிரே பெருமாள் 



தெற்கு மாட வீதியில் 


இன்றும் பெருமாள் லக்ஷ்மிஹாரத்துடன் சேவை சாதிக்கின்றார். 


பின்னழகு 







இப்போது சில வருடங்களாக ஒவ்வொரு பௌர்ணமியன்றும் கருடசேவை தந்தருளுகின்றார் திருமலையப்பன். அடியேன் ஒரு பௌர்ணமியன்று திருமலையில் தங்கும் பாக்கியம் கிட்டியது. கூட்டம் அதிகமில்லை என்பதால் மலையப்பசுவாமி அலங்கார மண்டபத்தில் இருந்து எழுந்தருளி  திரும்பி வரும் வரை பெருமாளுடன் வந்து அவரது கருடசேவையை முழுதுமாக சேவிக்கும் பாக்கியமும் கிட்டியது. அப்போது எடுத்த படங்கள் இப்பதிவில் இடம் பெறுகின்றன. 

கிழக்கு மாடவீதியில் பெருமாள்




 சுவாமி புஷ்கரிணி 

சுவாமிக்கு அடுக்கு தீபாராதனை

 கிழக்கு மாட வீதியில் சுவாமி புஷ்கரிணி கரைக்கு  வந்தவுடன் பெருமாள்  புஷ்கரிணி நோக்கி திரும்பி நிற்கிறார். ஏக காலத்தில் பெருமாளுக்கும் புஷ்கரிணிக்கும் தீபாராதணை நடைபெறுகின்றது. 


பக்தர்களுக்கு சேவை சாதித்தவாறே பின்புறமாக மலையப்பசுவாமி
 அலங்கார மண்டபத்திற்கு எழுந்தருளுகின்றார்.



கருட சேவை நிறைவாக திரையிடப்படுகின்றது. 



தூரத்தில் இருந்துதான் புகைப்படம் எடுக்க முடிந்தது என்பதால் படங்கள் தெளிவாக இல்லை மன்னிக்கவும். 


"நானேயோ தவம் செய்தேன்"  என்றபடி ஸ்ரீவாரி சேவையில் ஒரு வாரம் திருமலையிலேயே  பெருமாளின் திருவடியிலேயே  தங்கி பல்வேறு சேவைகளையும் சேவித்து  திருவேங்கடவனின் தரிசனமும் பல்முறை பெற்ற ஒரு ஆனந்த,  அற்புத கிடைத்தற்கரிய  வாய்ப்பின் போது இந்த பௌர்ணமி கருட சேவையை முழுதுமாக சேவிக்கும் பாக்கியம் கிட்டியது. 

No comments: