Saturday, December 21, 2013

ஆழ்வார் திருநகரி ஒன்பது கருட சேவை -3

மங்களாசாசனம் 

ஆழ்வார் திருநகரி தோரண வாயில்



 சிந்தையாலும் சொல்லாலும்  செய்கையினாலும்
 தேவபிரானையே தந்தை தாயென்றடைந்த
 வண்குருகூர்ச் சடகோபன்


 ஆழ்வாரின் தேன்தமிழ் பாசுரங்களை செவி மடுக்க நாயக்கர்  மண்டபத்தில்
வந்து  காத்திருக்கும்  ஐந்து   திருப்பதிகளின்  பெருமாள்கள்



ஸ்ரீவைகுண்டம் தேனும் பாலும் நெய்யும் கன்னலும் அமுதும் ஒத்த பெருமாளையும்,உறங்குவான் போல் யோகு செய்த புளிங்குடிப் பெருமானையும் ,  கூந்தல்மலர் 
மங்கைக்கும்  மண்மடைந்தைக்கும் குலவாயர் கொழுந்துக்கும் கேள்வன் 
வரகுணமங்கை பெருமாளையும்  ஆழ்வார் மங்களாசாசனம் செய்த பின் அவர்கள் அந்த ஆனந்தத்தில் கோவிலுக்குள் ஆடிக்கொண்டே எழுந்தருளுகின்றனர்.  பின்னர் ஆழ்வாருக்கு  சேவை சாதிக்க இரண்டு பெருமாள்கள் வருகின்றனர்இவர்கள் 
நோக்கும் பக்கமெல்லாம் கரும்பொடு செந்நெல்லோங்கு செந்தாமரை வாய்க்குந் 
தண்பொருநல் வடகரை வண் தொலிவில்லி மங்கலம் என்னும்  இரட்டைத் திருப்பதியின் ஸ்ரீனிவாசன்  தேவர்பிரான்அரவிந்த லோசனர் -  தாமரைக் கண்ணன்  
பெருமாள்கள் ஆவர். முன்னரே கூறியது போல திவ்ய தேசம் என்று பார்த்தால் 
தொலைவில்லி மங்கலம் ஒரே திவ்யதேசம்நவதிருப்பதி என்று பார்க்கும் போது 
இரண்டு திருப்பதிகள்.





இரட்டைத் திருப்பதி செந்தாமரைக் கண்ணன்




சிந்தையாலும் சொல்லாலும்  செய்கையினாலும் தேவபிரானையே தந்தை     தாயென்றடைந்த வண்குருகூர்ச் சடகோபன் தன்னிலையிழந்துஆண்     தன்மையினை விட்டுநாயிகா பாவத்தில் பராங்குச நாயகியாய் காதலனை கூட  விரும்பும் காதலி நிலையில் உள்ளதை  தோழி தாய்மாரை நோக்கிக் கூறும்    பாசுரத்தாலே ஆழ்வார் எம்பெருமானிடத்து ஈடுபட்டமையை பேசும் பாவனையில்   இந்த திவ்ய தேசத்து எம்பெருமானை மங்களாசாசனம் செய்துள்ளார்.

திருந்துவேதமும்வேள்வியும் திருமாமகளிரும்தாம் மலிந்
திருந்துவாழ்பொருநல் வடகரைவண்தொலைவில்லிமங்கலம்
கருந்தடங்கண்ணிகைதொழுத அந்நாள்தொடங்கிஇந்நாள்தொறும்
இருந்திருந்தஅரவிந்தலோசன! என்றென்றே நைந்திரங்குமே.

தாய்மார்களேதாமிரபரணியின் வடகரையில் அமைந்துள்ளது வளம்    பொருந்திய திருத்தொலைவில்லி மங்கலம் என்னும் திருத்தலம்இங்கு திருந்திய வேதங்களும் யாகங்களும் செல்வமும் நிறைந்துள்ளனபிராமணர்கள்    நிறைந்து வாழ்கின்றனர்அத்திருத்தலத்தை கரிய  விசாலமான கருணை   பொங்கும் கண்களையுடைய இவள் கைகூப்பி வணங்குகின்றாள்அந்நாள்   தொடங்கி  இந்நாள் வரையில்  தாமரைக் கண்ணாஎன்று என்றே உருக்குலைந்து  மனமும் கரைகின்றாள்.

இப்பாசுரத்தில் பெருமாள் அரவிந்த லோசனர்           – தாமரை கண்ணன்தாயார் கருந்தடங்கண்ணி மற்றும் திருப்பதி தொலைவில்லி    மங்கலம் மூன்றையும் ஆழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளார்.

குமுறுமோசைவிழவொலித் தொலைவில்லிமங்கலம்கொண்டுபுக்கு
அமுதமென்மொழியாளை நீருமக்குஆசையின்றியகற்றினீர்
திமிர்கொண்டாலொத்துநிற்கும் மற்றிவள் தேவதேவபிரானென்றே
நிமியும்வாயொடுகண்கள்நீர்மல்க நெக்கொசிந்துகரையுமே

தாய்மார்களேபல்வகையான ஓசைகள் முழங்கத் திருவிழாக்காணும் தலம்    திருத்தொலைவிலி மங்கலம் ஆகும்அமுதமாய் இனிய வார்த்தை  பேசும்   இப்பேதையை  அத்திருத்தலத்திற்குக் கொண்டு புக்கு அகன்று போகும்படி செய்து விட்டாயிற்றுஇனி உமக்கு அவளைத் திரும்பப்பெற ஆசை இருந்து ஒரு பயனும்  இல்லைஇவளோஅனுபவிக்க வேண்டிய விஷயத்தை  அனுபவிக்கவும்   மாட்டாதே செயலற்ற  நிலையில் நிற்கின்றாள்இவள் இதற்கு மேல்  பேசினால் “ தேவ  தேவ பிரான் “ என்று கூறி உதடு நெளிகிற வாயுடன் கண்களின் நீர்நிரம்ப   நெகிழ்ந்து கரைந்து உருகின்றாள்.  

பெருமாளோ தாமரைக் கண்ணன் அந்த திருத்தாமரைகளை மலரச்செய்கின்ற   சூரியன் நம்மாழ்வார்அவர்  உபதேச முத்திரையால் நமக்கு அருள்   வழங்குகின்றார்அவரை சரணாகப் பற்றிக்கொள்ள அவர் நம்மை வைகுண்டம்   சேர்ப்பார் என்று அருமையாக விளக்கம் அளித்தார்  வேளுக்குடி        ஸ்ரீ .வேக்ருஷ்ணன் ஸ்வாமிகள் அவர்கள்.  இதையே  ஆழ்வாரும் தனது பாசுரத்தில் இவ்வாறு கூறுகின்றார்.


இரட்டைத் திருப்பதி தேவர் பிரான் 

சிந்தையாலும் சொல்லாலும் செய்கையினாலும் தேவபிரானையே
தந்தை தாய் என்று அடைந்த வண் குருகூர்ச் சடகோபன்
முந்தை ஆயிரத்துள் இவை தொலைவில்லி மங்கலத்தைச் சொன்ன
செந்தமிழ் பத்தும் வல்லார் அடிமை செய்வர் திருமாலுக்கே.

வளமான திருக்குருகூரிலே உள்ளவர்களுக்குத் தலைவரானவர் ஸ்ரீசடகோபர்   ஆவார்அவர் தேவபிரானையே தந்தை தாய் என்று மனம்மெய் வாக்கு என்ற   மூன்றாலும்  அடைந்தவர்அவர் அருளிய பழமையான ஆயிரம் பாசுரங்களுள்,  திருத்தொலைவில்லி மங்கலம் என்னும் திருத்தலத்தைப் பற்றிச் செந்தமிழால்   அருளிச்செய்த இந்தபத்து பாசுரங்களை சேவிப்பவர்கள்  (வைகுண்டத்தில்)  திருமாலுக்கு அடிமையாக சேவை  செய்வார்கள்

முன் போலவே மாலைபரிவட்டம்  சடாரிகற்பூர ஆரத்தி நடைபெற்றபின்   ஆழ்வாரின் பாசுரங்களை கேட்ட ஆனந்தத்தில் பெருமாள்கள் இருவரும்   ஆடிக்கொண்டே திருக்கோவிலின் உள்ளே எழுந்தருளினர்.  



ஹரி ஹரி கோகுல ரமணா உந்தன் 
 திருவடி சரணம் (செந்தாமரை)கண்ணா 






                                                       

                                                         தென் திருப்பேரை நிகரில் முகில் வண்ணன் 


அடுத்து வேதவொலியும் விழாவொலியும் பிள்ளைக்குழா விளையாட்டொலியும் மறாத் தென்திருப்பேரை நிகரில் முகில்வண்ணர் வகுளாபாரணருக்கு சேவை    சாதித்தார்இவரை ஆழ்வார் பத்து பாசுரங்களால் மங்களாசாசனம் செய்துள்ளார்.


அடுத்து வேதவொலியும் விழாவொலியும் பிள்ளைக்குழா விளையாட்டொலியும் மறாத் தென்திருப்பேரை நிகரில் முகில்வண்ணர் வகுளாபாரணருக்கு சேவை சாதித்தார்.  இவரை ஆழ்வார் பத்து பாசுரங்களால் மங்களாசாசனம் செய்துள்ளார்.

வெள்ளைச்ச்சுரிசங்கொடாழியேந்தித் தாமரைக் கண்ணன் என்னெஞ்சினூடே
புள்ளைக் கடாகின்றவாற்றைக்காணீர் என்சொல்லிச்சொல்லுகேன் அன்னைமீர்காள்!
வெள்ளச் சுகமவன்வீற்றிருந்த வேதவொலியும்விழாவொலியும்
பிள்ளைக்குழாவிளையாட்டொலியுமராத் திருப்பேரெயில் சேர்வன் நானே. (7.3.1)


தாய்மார்களே! தாமரைக் கண்களுடைய எம்பெருமான் உள்ளே  சுழித்த வெண்சங்கையும் சக்கரத்தையும்  தரித்தவனாய்ப் பெரிய திருவடியாகிய கருடப்பறவை மீதேறி என் நெஞ்சிற்குள்ளே உலா வருகின்றான். அவன் தன்மையை என்ன வார்த்தைகளைக் கொண்டு உங்களுக்கு சொல்லுவேன்? பேரின்ப வெள்ளத்தையுடைய எம்பெருமான் எழுந்தருளியிருக்கின்ற வேதங்களின் ஒலியும், திருவிழாக்களின் ஒலியும், குழந்தைக் கூட்டங்கள் விளையாடுகின்ற  விளையாட்டின் ஒலியும் நீங்காமல் இருக்கின்ற திருப்பேரெயில் என்ற திருத்தலத்தை நான் அடைவேன் என்கின்றாள்.  

நகரமும்நாடும்பிறவும்தேர்வேன் நாணெனக்கில்லைஎன்தோழிமீர்காள்
சிகரமணிநெடுமாடநீடு தென்திருபேரெயில்வீற்றிருந்த
மகரநெடுங்குழைக்காதன்மாயன் நூற்றுவரையன்றுமங்கநூற்ற
நிகரில்முகில்வண்ணன்நேமியான் என் நெஞ்சங்கவர்ந்தென்னையூழியானே.

என்னுடையதோழிகளே! (எம்பெருமானைநகரங்களிலும் நாடுகளிலும் பிறஇடங்களிலும் தேடுவேன்;  எனக்கு நாணம் இல்லைஏன்என்றால் சிகரங்களையுடைய  அழகிய நீண்ட    மாடங்கள் நிலைத்திருக்கின்தென்திருப்பேரையில் எழுந்தருளியிருக்கின்ற மகரநெடுங் குழைக்காதனும் மாயனும் துரியோதினாதியார்கள் அன்று அவியும்படியாக மந்திரித்த ஒப்பில்லாத முகில் வண்ணனும்சக்கரத்தண்ணலனுமான பெருமான்   என் மனத்தினைக் கொள்ளை கொண்டு எத்தனை ஊழிக் காலத்தை உடையான்?

தென்திருப்பேரை பெருமாள் மகரநெடுங்குழைக்காதர்மகர மீன் வடிவத்தில் உள்ள நீண்ட குழை என்னும்  காதணியை அணிந்த  பெருமாள்  பராங்குச நாயகியின்   உள்ளத்தை கொள்ளை கொண்டான்  ஆகவே அவள்    தாய்மாரும் தோழிமாரும்   தடுக்கவும் தலைவி திருப்பேரைக்குச் செல்வேனென்று துணிந்ததை கூறும் வகையில் செல்லுவன்  என்று கூறுகிறார் என்றும்,  பொதுவாக மாயம் என்றால் பொய்   ஆனால் வைணவ சம்பிரதாயத்தில் மாயம் என்றால் ஆச்சரியம், நாம் மீண்டும் கருக்குழியில் புகாமல் நம்மை காப்பவர் ஆழ்வார் எனவே அவரது திருப்பாதங்களை பற்றுவோம்  என்று  அருமையாக விளக்கம் அளித்தார்  வேளுக்குடி   ஸ்ரீ .வேக்ருஷ்ணன் ஸ்வாமிகள் அவர்கள்.  


 நிகரில் முகில் வண்ணன் பெருமாளின் கண்ணாடி சேவை 

தோளுக்கினியானில் பெருமாள்கள் 


திருக்குளந்தை மாயக்கூத்தர்



அடுத்து மாடங்களையும் கொடிகள் கட்டிய மதிகளையுடைய அழகிய திருக்குளந்தை மாயகூத்தர் ஆழ்வாருக்கு சேவை சாதித்தார்.

கூடசென்றேன் இனி என் கொடுக்கேன்கோள்வளை நெஞ்சத் தொடக்க மெல்லாம்
பாடற்றொழிய இழந்து வைகல் பல்வளை யார்முன் பரிசழிந்தேன்
மாடக்கொடி மதிள் தென்குளந்தை வண்குடபால் நின்ற மாயக்கூத்தன்
ஆடல்பறவை உயர்த்த வெல்வோர் ஆழிவலவனை ஆதரித்தே

என்று நம்மாழ்வார் தமக்கு உலக வாழ்க்கையில் வெறுப்புண்டானதை,  தலைவனை நோக்கிச் செல்லக் கருதிய தலைவி பேச்சாலே அவரை   மங்களாசாசனம் செய்தார்.

மாடங்களையும் கொடிகள் அலங்கரிக்கும் மதில்களையுமுடைய அழகிய   திருக்குளந்தை என்னும் திருத்தலத்தில் மேற்கு நோக்கிய திருமுகமண்டலத்துடன் திருக்கோலமாய் எழுந்தருளியுள்ளான் வண்மையுடைய மாயக்கூத்தன்கருடப்பறவையைக் கொடியியிலே  உயர்த்திய போரிலே வெல்லுகின்ற   திருச்சக்கரத்தை வலக்கையிலேயே  உடையவன் எம்பெருமான்அப்பிரானை விரும்பி கலவியின் நிமித்தம் சென்றேன்என்னுடைய அழகிய வளையல்,  மனம், கண்கள், ஆடை ஆபரணங்கள் ஆகிய அனைத்தையும் என்னிடத்திலிருந்து நீங்கி ஒழிய இழந்து பலவகையான   வளையல்களை அணிந்த இப்பெண்களுக்கு முன்னே நாணமும் நீங்கினேன்இனி எதனைக் கொடுப்பேன்?  என்று தோழியரின் முன்னர் தாம் நாணம் இழந்ததை கூறுகின்றார்   நம்மாழ்வார்.


ஆழ்வாரின் திருமேனி தாமிரபரணி தீர்த்தத்தை காய்ச்சி  அதில் மதுரகவியாழ்வார் தன் சக்திகளை பிரயோகித்து உருவாக்கிய கைப்படாத  சுயம்பு திருமேனி ஆகும்.  


மங்களாசாசனம் செய்யும் நம்மாழ்வார் 



நம்மாழ்வார் பின்னழகு 


திருக்கோளூர் நிக்ஷேபவித்தன் பெருமாள் 


அடுத்து திருக்கோளூர் நிக்ஷேபவித்தன் பெருமாள்   சேவை சாதித்தார். அவருடன் மதுரகவியாழ்வாரும் எழுந்தருளினார்.  செங்கண் கருமுகிலை  செய்யவாய் செழுங்கற்பகத்தை ஆழ்வார் இருப்பு, வளர்ச்சி, இன்பம் இவை எல்லாம் கண்ணனென்று உணர்ந்து  திருக்கோளூரிலீடுபட்டதை, தலைவன் நகர் நோக்கி சென்ற தலைமகளைப் பற்றித் தாய் இரங்கும்  பத்து பாசுரத்தாலே மங்களாசாசனம் செய்துள்ளார்.

உண்ணுஞ்சோறுபருகுநீர் தின்னும்வெற்றிலையுமெல்லாம்
கண்ணன் எம்பெருமானென்றென்றே கண்கள்நீர்மல்கி
மண்ணிணுளவன் சீர் வளம்மிக்கவனூர்வினவி
திண்ணம் என்னிளமான்புகுமூர் திருக்கோளூரே.

இளமானைப் போன்ற என் மகள் தனக்கு எல்லாம் கண்ணனே என்கின்றாள். அவள் உண்கின்ற உணவும்குடிக்கின்ற தண்ணீரும், வாய் மெல்லுகின்ற வெற்றிலையும் ஆகிய எல்லாமே கண்ணனாகிய எம்பெருமானே  என்று  திரும்பத்திரும்பக் கூறி கண்ணீர் விட்டு உருகுகின்றாள்அந்த எம்பெருமானுடைய திருக்கலியாண குணங்களையும், அவனையே தனிச்செல்வமாக பெற்ற வளம் கொண்ட அவன் ஊரையும் பற்றிக் கேட்டுக்கொண்டு செல்கின்ற என் மகள் முடிவில் புகும் ஊரே திருக்கோளூர் ஆகும். நிச்சயம் என் பெண் திருக்கோளூர் புகுந்து விடுவாள்; என்கிறார் திருத்தாயார்.  

திருக்கோளூரிலே புஜங்க சயனத்தில் கிழக்கு நோக்கிய திருமண்டலத்துடன்   பெருமாள் குபேரனுக்கு  செல்வமளந்த மரக்காலை தலைக்கு வைத்து கையில் அஞ்சன மை தடவி நிதி எங்கு இருக்கின்றது என்று பார்த்துக்கொண்டிருப்பதாக ஐதீகம். நவ திருப்பதிகளில்  இரண்டு திருப்பதிகளில் பெருமாள் சயன கோலத்தில் சேவை சாதிக்கின்றார் அவையாவன திருக்கோளூரும் புளிங்குடியும் ஆகும் இந்த இரு திருப்பதிகளையும் ஆழ்வார் ஒரு பாசுரத்தால் மங்களாசாசனம் செய்துள்ளார். அந்த பாசுரம் இதோ

கொடியார்மாடக் கோளூரகத்தும்புளிங்குடியும்
மடியாதின்னே நீதுயில்மகிழ்ந்துதான்
அடியாரல்லல்தவிர்த்த அசைவோ? அன்றேல் இப்
படிதான் நீண்டுதாவிய அசைவோ? பணியாயே

கொடிகள் அலங்கரிக்கும் மாடங்களையுடைய திருக்கோளூர்  என்ற திவ்ய தேசத்திலும், திருப்புளிங்குடி என்ற திவ்ய தேசத்திலும் இப்படி திருக்கண் வளர்ந்திருக்கின்ற பெருமாளே! இவ்வாறு பள்ளி கொண்டது பல அவதாரங்களை எடுத்து அடியார்களுடைய  துன்பத்தை நீக்கிய தளர்ச்சியோ! அல்லாமல் த்ரிவிக்ரம அவதாரத்தில் இவ்வுலகத்தை தாவி அளந்த தளர்சியோ? அருளிச்செய்ய வேண்டும் என்று வினவுகின்றார் ஆழ்வார்.

வைத்த மாநிதியாம் மசுசூதனையே அலற்றி
கொத்து அலர் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் சொன்ன
பத்து நூற்றுள் இப்பத்து அவன் சேர் திருக்கோளூர்க்கே
சித்தம் வைத்து  உரைப்பார் திகழ் பொன்உலகு ஆள்வாரே.

திருக்கோளூர்ப் பெருமான் சேர்த்து வைத்த சேமநிதி போன்றவன்; அந்த மசுசூதனனாகிய  என்பெருமானை கொத்து கொத்தாய் மலர்கள் மலரும் சோலைகள் சூழ்ந்த திருக்குருகூர்ச் சடகோபன் ஆயிரம் திருப்பாசுரங்களில் துதித்துள்ளார். அவற்றுள் இப்பத்து  பாசுரங்களையும் பெருமான் எழுந்தருளியுள்ள திருக்கோளூரை எண்ணி அவனை நெஞ்சில் பதித்துக் கொண்டு சொல்ல  வல்லவர்கள் உயர்ந்த பரமபதத்தை ஆள்வர்.


நிக்ஷோபவித்த பெருமாளை ஆழ்வார் மங்களாசாசனம் செய்த பின் பெருமாள் மட்டும் திருக்கோவிலுக்குள்ளே எழுந்தருளுகின்றார்.  பின்னர் ஆழ்வார் திருநகரி பெருமாளை ஆழ்வார் மங்களாசாசனம் செய்த

இலிங்கத்திட்ட புராணத்தீரும் சமணரும் சாக்கியரும்
வலிந்துவாது செய்வீர்களும் மற்றுநுந்தெய்வமுமாகி நின்றான்
மலிந்து செந்நெல் கவரிவீசும் திருக்குருகூரதனுள்
பொலிந்துநின்ற பிரான் கண்டீர் ஒன்றும் பொய்யில்லை போற்றுமினே (4.10.5)

இலிங்க புராணத்தைக் காட்டி பேசுவோரே! சமணர்களும் பௌத்தர்களும் மற்றும் வலைந்து வாது செய்யும் வைசேடிகர்களும், நீங்கள் வணங்கும்தெய்வங்களுக்குள்ளும் உங்களுக்குள்ளும், ஆத்மாவாகத் தங்கி இருப்பவன் எம்பெருமான் ஒருவனே. நெற்கதிர் கவரி போல் வீசும் அழகு பொருந்திய திருக்குருகூரில் கலியாண குணங்களுடன் பொலிந்து நின்ற  கோலத்துடன் சேவை சாதிப்பவன் ஆதிநாதன் ஆவான். நான் கூறும் இவற்றுள் சிறிதும் பொய்யில்லை; எனவே அவனையே வணங்கித் துதியுங்கள்.


அரையர் சுவாமிகள் இந்த பாசுரத்தை தாளத்துடன் விண்ணப்பம் செய்கின்றார்.  ஆழ்வாருக்கு பொலிந்து நின்ற பெருமான் மாலை, பரிவட்டம், சடாரி சார்த்தப்படுகின்றது. ஆனால் பெருமாள் பந்தலுக்கு எழுந்தருளுவதில்லை.  பின்னர் மதுரகவியாழ்வார் தனது குருநாதர் வகுளாபரணரை மங்களாசாசனம் செய்கின்றார்.  



மதுரகவியாழ்வார் 


நம்மாழ்வாருக்கு அவர் தம் வாழ்நாளில் நிறைய பணிவிடைகள் புரிந்த மதுரகவியாழ்வார், இந்த திருக்கோளூர் திருத்தலத்தில் சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரத்தில் கருடனின் அம்சமாக  விஷ்ணுநேசர் என்பவருக்கு புத்திரனாக அவதரித்தவர்.    இவர்   தமது குருநாதரான நம்மாழ்வாரை கடவுளாகக் கருதி தாம் பாடிய   கண்ணி நுண் சிறு தாம்பினால்”  என்னும் பாசுரத்தினால் மங்களாசாசனம் செய்தார், நம்மாழ்வாரின் மாலை மதுரகவியாழ்வாருக்கு அணிவிக்கப்பட்டது.  அவரை வலம் வந்து உள்ளே செல்ல மங்களாசாசன  உற்சவம் சிறப்பாக நிறைவேறியது.      அடுத்த பதிவில் நவதிருப்பதி எம்பெருமான்களின் திருமஞ்சன சேவையை காணலாம் அன்பர்களே.   

No comments: