Thursday, January 31, 2008

கருட சேவை - 4 கஜேந்திர மோக்ஷம்

கஜேந்திர மோக்ஷம்
( அஸாம் மாநிலம் கவுகாத்தியில் எடுக்கப் பட்ட படம். பெருமாளை பூரி ஜகந்நாதரைப் போல் அமைத்துள்ளதை கூர்ந்து பார்த்தால் கவனிக்கலாம்.)   

விசிஷ்டாதவைத்தின் மைய கருத்தே பூரண சரணாகதிதான் அந்த சரணாகதி தத்துவத்தை உணர்த்தும் நிகழ்ச்சிதான் கஜேந்திர மோக்ஷம். ஜீவாதமாவாகிய கஜேந்திரன் தன் பலத்தின் மேல் ஆணவம் கொண்டு சம்சாரமாகிய குளத்தில் உள்ள துன்பம் மற்றும் இறப்பாகிய முதலையுடன் ஆயிரம் வருடங்கள் போராடியும் அதனால் முதலையின் பிடியிலிருந்து விடுபட முடியவில்லை. அது தன் ஆணவத்தை விட்டு பூரண சரணாகதியுடன் "ஆதி மூலமே" என்று அலறிய அடுத்த கணமே வேத சொரூபியான கருடன் மேல் ஆரோகணித்து கையில் சுதர்சன சக்கரத்துடன் வந்து யானையின் துயர் தீர்த்த பகதவத்சலன். ஆகவே பூரண சரணாகதியை விளக்குவதே இந்த கஜேந்திர மோக்ஷம்.

எல்லா வைணவத்தலங்களிலும் பௌர்ணமியன்று கருட சேவையுடன் கஜேந்திர மோக்ஷம் சிறப்பாக நடைபெறுகின்றது. திருவரங்கத்தில் சித்ரா பௌர்ணமியன்றும் பல் வேறு தலங்களில் ஆனி கருடன், ஆடி கருடன் என்று அந்தந்த மாதங்களில் பௌர்ணமி தினங்களிலும் கருட சேவையுடன் கஜேந்திர மோட்சம் சிறப்பாக நடைபெறுகின்றது. பெருமாள் கருட சேவை தரும் மற்ற சமயங்கள் பிரம்மோற்சவத்தின் ஐந்தாம் நாள், மற்றும் வைகுண்ட ஏகாதசி ஆகும்.

இனி பாகவதத்தில் கஜேந்திர மோக்ஷம் எவ்வ்வாறு கூறப்பட்டுள்ளது என்று பார்ப்போமா? கம்பீரமும் வீரமும் மிகுந்த யானைகளின் அரசனான கஜேந்திரன் தன் பிடிகளுடனும் குட்டிகளுடனும் காட்டில் மரங்களை உடைத்தும் மூங்கிலை உண்டும் உலாவி கொண்டிருந்தது அதன் அந்த சப்தத்தை கேட்டதுமே சிங்கம் புலி முதலிய பலம் மிகுந்த மிருகங்கள் பயந்து ஓட மற்ற சிறிய மிருகங்களான மான் , முயல் முதலியவை பயமில்லாமல் அதனுடன் ஒட்டி வந்து கொண்டிருந்தன. அப்போது எங்கிருந்தோ தாமரை மலரின் நறுமணம் அவனது துதிக்கையை எட்டியது .உடனே த்னது பரிவாரங்கள் சூழ அந்த பொய்கையை நோக்கி ஓடத்தொடங்கினான். வழியில் உள்ளவற்றையெல்லாம் துவம்சம் செய்து கொண்டு பொய்கையை அடைந்த கஜராஜன் தன் துதிக்கையால் தாமரைப் பூ. அல்லி ஆகியவற்றின் மகரந்தங்கள் நிறைந்த அந்த இனிய பொய்கை நீரை உறிஞ்சி உளம் குளிர பருகி, அந்த நீரை தன் பரிவாரங்களுக்கும் வழங்கினான் ஒரு குடும்பத்தலைவனைப் போல பின் ஒரு தாமரை மலரை தான் வணங்கும் பெருமாளுக்கு சமர்பிக்க பறிக்க பொய்கைக்குள் காலை வைத்த போது அந்த பொய்கையிலிருந்த முதலை கஜேந்திரனின் காலைக் கவ்விக் கொண்டு கஜேந்திரனை தண்ணீருக்குள் இழுக்க முயன்றது.

பின்னிருந்து மற்ற பெண் யானைகளும், குட்டிகளும் சேர்ந்து இழுத்தன் ஆனால் முதலைக்கு தண்ணீரில் பலம் அதிகமல்லவா? இந்த இழுபறி நீடித்தது. ஆயிரம் வருடங்கள் இந்த இழுபறி நீடித்தது. தேவர்கள் எல்லாரும் கூடி நின்று இந்த போராட்டத்தை கண்ணுற்றனர். மெள்ள மெள்ள கஜேந்திரன் தன் சக்தி குறைந்து வருவதை உணர்ந்தான், மற்ற பிடிகள் எல்லாம் இனி பயனில்லை என்று கஜேந்திரனை விட்டு வீடு வரை மனைவி வீதி வரை உறவு காடு வரை பிள்ளை என்று ஓடிவிட்டன, கஜேந்திரன் தன் துர்கதியான நிலையை உணர்ந்தான், மரணத்தின் வாயிலில் நின்ற அந்த வேளையில் அந்த பரம் பொருளைத் தவிர தனக்கு எந்த பற்றுக் கோடும் இல்லை என்று உணர்ந்தான். முன் ஜென்மத்தில் தான் அந்த ஆதி மூலத்தை துதித்த துதிகள் அவனுக்கு ஞாபகம் வந்தன. அவன் அவற்றை பாராயணம் செய்தான். அந்த ஸ்தோத்திரத்தின் சாரம் பரம புருஷனே உனக்கு நமஸ்காரம், உன்னிடமிருந்துதான் சகலமும் தோன்றியது, அனைத்துக்கும் ஆதாரம் நீயே, அனைத்தும் உன்னுள்ளே அடக்கம், உன்னுடைய மாயையினாலே அண்ட சராசரங்களும் இயங்குகின்றன, சில ஒளிர்கின்றன, சில அழிகின்றன. பிரளய முடிவில் அனைத்து உயிர்களும் அழிய ஆலிலை மேல் துயில் கொள்ளும் மாயனும் நீயே. உன்னை விட்டால் எனக்கு வேறு பற்றுக் கோடு யாருமில்லை, உன் சரணமே சரணம். ஆதி மூலமே! என்று தாமரைப் பூவை தனது தும்பிக்கையில் வைத்துக் கொண்டு அலறியது கஜேந்திரன்.




கஜேந்திரனின் அந்த அபயக்குரல் கேட்டவுடனே பெருமாள் வேத சொருபனான ஓடும் புள்ளேறி ( கருடனில), கையில் சுதர்சன சக்கரத்துடன் விரைந்து வந்து சக்கராயுத்தால் முதலையை வதைத்து கஜேந்திரனைக் காப்பாற்றி அவனுக்கு மோக்ஷமும் அளித்தான் அந்த பக்த வத்சலன். உங்களுக்கு சில சந்தேகம் ஏற்பட்டிருக்கலாம் அதற்கான விடைகள் இதோ.
முதலாவது அத்தனை யானை கூட்டத்தில் கஜேந்திரனை மட்டும் முதலை இழுக்க காரணம் என்ன? முற்பிறவியில் யானை பாண்டிய மன்னன் இந்திரதும்யனாக பிறந்து மஹா விஷ்ணு மீது மிகவும் அதீத பக்தி கொண்டு வாழ்ந்து கொண்துருந்தான். ஒரு சமயம் அவன் பூஜை செய்து கொண்டிருந்த போது துர்வாச முனிவர் அவனைக் காண வந்தார். பூஜையில் ஈடுபட்ட மன்னன் முனிவரை வெகு நேரம் காக்க வைத்து விட்டான். அதனால் கோபமடைந்த துர்வாசர், என்னை மதிக்க்காமல் மதம் கொண்டு நடந்த நீ , மதம் கொண்ட யானையாக மாறக்கடவது என்று சாபம் கொடுத்தார். மன்னன் முனிவர் தாள் படிந்து வேண்டி, அடுத்த பிறவியிலும் தான் பெருமாள் கொண்ட பக்தி தொடரவேண்டும் என்று வேண்ட, முனிவரும் அவ்வாறே வரம் கொடுத்து அந்த மஹா விஷ்ணுவாலேயே உனக்கு மோக்ஷம் கிட்டும் என்று சாப விமோசனமும் அளித்தார்.

இனி முதலை , முற்பிறவியில் அவன் கூஹூ என்னும் கந்தர்வனாக இருந்தான். பொய்கைக்கு கால் கழுவ வருபவர்களின் காலை பற்றி இழுத்து விளையாடும் வழக்கத்தை கொண்டிருந்தான். ஒரு சமயம் தேலவர் முனிவரின் காலை இவ்வாறு இழுத்த போது முனிவர் அவனுக்கு தண்ணீரில் கிடந்து தவிக்கும் முதலையாக ஆகும் சாபம் அளித்தார். அவன் தன் தவறை உணர்ந்து சாப விமோசனம் வேண்ட மஹா விஷ்ணுவின் சுத்ர்சன சக்கரம் பட்டு உன்க்கு சாப விமோசனம் ஏற்படும் என்று சாப விமோசனம் அளித்தார்.
கஜேந்திரன் ஏன் ஆயிரம் வருடங்கள் காத்திருந்தான் ஏன் முதலிலேயே சரணாகதி அடைந்திருக்கக் கூடாது. மனித மனம் இவ்வாறு தான் உள்ளது. சம்சார மாயையில் மயங்கி நாம் ஏதோ நாம் தான் நமது உறவினர்களைத் தாங்குவது போல் மாயையில் உழல்கின்றோம். அவனன்றி ஒரு அணுவும் அசையாது என்பதை உணர்ந்து எப்போது நாம் பூரண சரணாகதி அடைகின்றோமோ அப்போது தான் அவன் அருள் நமக்கு கிட்டும்.

பெருமாள் ஏன் ஆயிரம் வருடம் காத்திருக்க வேண்தும் உடனே வந்து காத்திருக்கக் கூடாதா? அது வரை கஜேந்திரன் தனது வலிமையின் மேலும் தனது பிடிகள் தன்னை காப்பாற்றும் என்ற நம்பிக்கையிலும் இருந்ததால்தான் பகவான் தனது பஞ்சாயுதங்களுடன் எப்போதும் தன் பக்தர்களைக் காப்பாற்ற தயாராக இருந்தாலும் அவன் உண்மையை உணரும் வரை காத்திருந்தார். ஏன் தானே வந்திருக்க வேண்டும் சுதர்சன சக்கரத்தை அனுப்பியிருந்தாலும் பணி முடிந்திருக்குமே , அவரது சௌலப்பியத்தையும், ப்கத வத்சல குணத்தையும் காட்டவேதான். பாகவதத்தில் அந்த அருமையான ஸ்தோத்திரங்கள் உள்ளன அவற்றை காலையில் ஒதுபவர்களுக்கு சகல வித நன்மைகளும் கிடைக்கும் விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்வதற்கு இணையானது அது.
பூரண சரணாகதி அடைந்த கஜேந்திரனை பெருமாள் காப்பாற்றியதைப் போல் "மாம் ஏகம் சரணம் வ்ரஜ" என்று அவர் கூறியபடி அவர் அடி சரணடையும் தன் பக்தர்கள் அனைவரையும் அவர் காப்பாற்றுவார் என்பதே இந்த கஜேந்திர மோக்ஷம் நமக்கு உணர்த்தும் பாடம்.

இனி இந்த கஜேந்திர மோக்ஷத்தை ஆழ்வார்கள் எப்படி பாடியுள்ளனர் என்று பார்ப்போமா?

தாழைத் தண்ணாம்பல் தடம் பெரும் பொய்கைவாய்

வாழு முதலை வலைப்பட்டு வாதிப்புண்
வேழந் துயர்கெட விண்ணோர் பெருமானாய்
ஆழிப்பணி கொண்டானாலின்று முற்றும்
அதற்கருள் செய்தானாலின்று முற்றும்.

என்று கோபியர்கள் யசோதையிடம் சென்று கண்ணன் மேல் குற்றம் கூறுவது போல் உண்மையில் அவரது பெருமையைப் பாடுகின்றார் பெரியாழ்வார்.

பெண்ணுலாம் சசடையினானும் பிரமனுமுன்னைக் காண்பான்

எண்ணிலாவூழியூழி தவம்செய்தார்வெள்கிநிற்ப
விண்ணுளார் வியப்பவந்து ஆனைக்கருளையீந்த
கண்ணறா உன்னையென்னோ? களைகணாக்கருதுமாறே
.
என்று பிரமனுக்கும் சிவனுக்கும் கிடைக்காத பாக்கியத்தை யானைக்கு அருளியதை போற்றுகின்றார் தொண்டரடிப் பொடியாழ்வார்.

மீனமர் பொய்கை நாள் மலர் கொய்வான் வேட்கையினோடு சென்றிழிந்த

கானமர் வேழம் கையெடுத்தலறக் கரா அதன் காலினைக் கதுவ
ஆனையின் துயரம் தீரப் புள்ளூர்ந்து சென்று நின்று ஆழி தொட்டானை
தேனமர் சோலை மாடமாமயிலைத் திருவல்லிக்கேணிக் கண்டேனே.


என்று பெருமாள் கஜேந்திர வரதராகவும், கரி வரதராகவும் வரத ராஜராகவும் போற்றப்படுவதை பாடுகின்றார் திருமங்கையாழ்வார்.

Wednesday, January 30, 2008

கருட சேவை - 3 பெரியாழ்வார் வைபவம்

பெரியாழ்வார் வைபவம்


கருடன் என்றவுடன் நமக்கு நினைவுக்கு வரும் நிகழ்ச்சிகள் இரண்டு முதலாவது விஷ்ணு சித்தர் பொற்கிழி பெற்று யானையின் மேல் நகர்வலம் வரும் போது பெருமாள் பெரிய பிராட்டியுடன் வரும் போது அவருக்கு கண்ணேறு பட்டுவிடுமோ என்று பயந்து பெரியாழ்வார் திருப்பல்லாண்டு பாடியது. இரண்டாவது கஜேந்திர மோட்சம் இந்தப் பதிவில் பெரியாழ்வார் வைபவத்தைப் பற்றிப் பார்ப்போம். பெரியாழ்வார் என்னும் விஷ்ணு சித்தர் கருடாம்சமாய் பிறந்தவர். பெருமாளுக்கு திருப்பல்லாண்டு பாடியவர் இவரே. . ஸ்ரீ வில்லிபுத்தூரிலே வடபெருங்கோயிலுடையானுக்கு (வடபத்ர சாயிக்கு) நந்தவனம் அமைத்து புஷ்ப கைங்கரியம் செய்து வந்தார் பெரியாழ்வார். இவரே சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாள், ஆண்டாள் நாச்சியாரை வளர்த்து அரங்கனுக்கே மாமானார் ஆகும் பேறு பெற்றார். 

அப்போது கூடல் நகராம் மதுரையை ஆண்டு வந்த வல்லப தேவன் என்ற பாண்டிய மன்னன் ஒரு சடசு நடதினான். அதில் அவன் " யார் முழு முதற் கடவுள்" ? என்ற கேள்வியை மக்கள் முன் வைத்தான். அதற்கு பரிசாக தங்க நாணயங்கள் அடங்கிய பொற்கிழி ஒன்றை தனது தவத்திறமையினால் எந்த வித பிடிப்புமில்லாமல் ஆகாயத்தில் தொங்க விட்டான். தனது கேள்விக்கு யார் சரியான விடை அளிக்கின்றார்களோ அவரது காலடியில் இந்த பொற்கிழி தானாக விழும் என்றும் அறிவித்திருந்தான் விஷ்ணு சித்தர் கனவிலே பெருமாள் தோன்றி அவரை சடசில் கலந்து கொள்ள பணித்தார். இறைவன் ஆணைப்படி விஷ்ணு சித்தர் அஞ்சிக்கொண்டே அந்த சடசில் கலந்து கொள்ள சென்றார். அவர் வால்மீகி, துருவன் போல மயர்வறும் மதி நலம் பெற்று , மிகுந்த திறமையுடன் ஸ்ரீமந் நாராயணனே முழுமுதற் பரம்பொருள் என்று வேதங்கள் ஸ்மிருதிகள், இதிகாசங்கள், புராணங்கள் இவைகளிலிருந்து ஆயிரமாயிரம் மேற்கோள்கள் காட்டி விளக்கினார். . பொற்கிழி இவர் பக்காம் தாழ வளைய இவரும் அக்கிழியை அறுத்துக் கொண்டு உருவினார். இதனைக் கண்ட அரசன், மற்ற வித்வான்கள் வியந்தனர். வெற்றி பெற்ற விஷ்ணு சித்தரை வல்லப தேவன் தன்து பட்டத்து யானையின் மேல் ஏற்றி, நகர்வலமாக அழைத்து சென்றான். விஷ்ணு சித்தருக்கு பட்டர் பிரான் அல்லது அறிவாளிகளின் தலைவன் என்னும் பட்டம் அளித்து கௌரவித்தான் அரசன்.


பெரிய திருவடியில் பெருமாள் பெரிய பிராட்டியாருடன்

விருது, சங்கம் போன்ற பல வாத்ய கோஷங்களுடன் பட்டத்து யானையின் மேல் நகர் வலம் அழகைக் காண வியப்பூட்டும் வகையில் பரம் பொருளான ஸ்ரீமந் நாராயணன் வானின் மேல் பெரிய பிராட்டியுடன் பெரிய திருவடியான கருடன் மேல் ஆரோகணித்து தன் பரிவாரங்களுடன் நகர்வலத்தைக் காண விழைபவன் போல் காட்சி தந்தார். எம்பெருமானுக்கு எங்கே கண்ணேறு பட்டு தீங்கு விளைந்துவிடுமோ என்று அஞ்சி அன்பு மிகுதியால் விஷ்ணு சித்தர் காப்பாக யானை மீதிருந்த மணிகளைத் தாளாமாகக் கொண்டு , "பல்லாண்டு", "பல்லாண்டு" என்று செய்யுளிசைத்துப் பாடத் தொடங்கினார். இவ்வாறு பரந்தாமனுக்கே பல்லாண்டு பாடியதால் இவர் "பெரியாழ்வார்" என்று அழைக்கப்படலானார். கருடனைப் போற்றும் பெரியாழ்வாரின் ஒரு பாசுரம்

  நெய்யிடைநல்லதோர்சோறும் நியதமுமத்தாணிச் சேவகமும் கையடைக்காயும்கழுத்துக்குப்பூணொடு காதுக்குக்குண்டலமும் மெய்யிடநல்லதோர்சாந்தமுந்தந்து என்னை வெள்ளுயிராக்கவல்ல பையுடைநாகப்பகைக் கொடியானுக்குப் பல்லாண்டு கூறுவனே.


அடுத்து கஜேந்திர மோக்ஷ பதிவில் சந்திப்போம்.

கருட சேவை - 2 கருடன் சரிதம்

கருட சரிதம்
மாலாய்ப்பிறந்தநம்பியை மாலே செய்யும்மணாளனை


  1. ஏலாப்பொய்களுரைப்பானை இங்கேபோதக்கண்டீரே?

மேலால்பரந்தவெயில் காப்பான் வினதைசிறுவன்சிறகென்னும்
மேலாப்பின்கீழ்வருவானை விருந்தாவனத்தேகண்டோமே
.
என்று சூடிக் கொடூத்த சுடர்க் கொடியாள் பாடிய படி எம்பெருமானுக்கு வெயில் படாதபடி தன் பரந்து விரிந்த சிறகால காப்பவன் விநதை சிறுவன் கருடன். கருடன் வைநதேயன் என்றும் அழைக்கப்படுகின்றான். அவனது சரிதத்தை சுருக்கமாக காண்போமா?
சப்த ரிஷிகளில் ஒருவர் காஷ்யபர், அவருக்கு இரண்டு மனைவிகள் முதலாமவள் விநதை, இரண்டாமவள் கத்ரு. நல்லவளான விநதைக்கு இரண்டு மகன்கள் மூத்தவன் அருணன், இளையவன் கருடன். அருணன் சூரியனின் தேரோட்டி. கத்ருவின் மகன்கள் நாகங்கள். ஒரு சமயம் பொறாமையினால் கத்ரு ஒரு சூழ்ச்சி செய்தாள். அவள் விநதையை ஒரு போட்டிக்கு அழைத்தாள். அந்த போட்டியில் யார் தோற்றுப் போகின்றார்களோ அவ்ர் வெற்றி பெற்றவரின் அடிமையாக இருக்க வேண்டும் என்பதே போட்டியின் நிபந்தனை. அந்த போட்டி என்ன ? இந்திரனின் வெள்ளைக் குதிரையான உச்சைர்வத்தின் வாலின் நிறம் என்ன என்பதே போட்டி. விநதை தூய வெள்ளை நிறக் குதிரையான உச்சைர்வத்தின் வாலின் நிறம் வெள்ளை என்று கூற, கத்ரு கறுப்பு என்று கூறினாள். பின் போட்டி ந்டைபெற்ற போது தந்திரமாக கத்ரு தனது மகன்களான நாகங்களை அழைத்து உச்சர்வத்தின் வாலை சுற்றிக் கொள்ளக் க்றுகிறாள். எனவே அவர்கள் பார்த்த போது உச்சர்வத்தின் வால் கருப்பாக தோன்றியது. இவ்வாறு சூழ்ச்சியால தோற்ற விநதை கத்ருவின் அடிமையாக ஆகின்றாள்.
தன் அன்னை , சிற்றன்னைக்கு அடிமையாக சேவை செய்து வருவதைக் கண்டு பொறுக்க முடியாமல் கருடன் தன் அன்னையிடம் அவரது இந்த நிலைக்கான காரணத்தை கூற வேண்டுகிறான். விநதையும் நடந்ததைக் கூறுகின்றாள். கருடன் தன் சிறிய தாயாரிடம் சென்று தன் தாய்க்கு விடுதலை அளிக்குமாறு வேண்டுகின்றான். அலட்சியமாக கத்ருவும் தேவ லோகத்திலிருந்து அமிர்தம் கொண்டு வா? உன் தாயை விடுதலை செய்கின்றேன் என்று ஆணவத்துடனும், அந்த காரியம் முடியாதது என்ற நம்பிக்கையுடனும் பதிலிறுக்கின்றாள்.
தன் தாயின் துயர் தீர்க்க யாரால் முடியாததையும் செய்ய தாயிடம் ஆசி பெற்று புறப்பட்டான் கருடன். இந்திர லோகத்தை தன் பறக்கும் சக்தியினால சுலபமாக அடைந்து விடுகின்றான் கருடன். அமிர்த குடத்தை நெருங்கும் கருடனுக்கும் தேவர்களுக்கும் இடையே பெரும் போர் நடை பெறுகின்றது. தேவர்களை வெற்றி பெற்று நின்ற கருடனுடன் போரிட இந்திரனே வந்தான், ஆயினும் அவனாலும் கருடனை வெல்ல முடியாமல் இறுதியாக வஜ்ராயுதத்தை எய்கின்றான், கருடன் அப்போது வஜ்ராயுதத்தை வணங்கி தான் அமிர்தம் பெற வந்ததற்கான உண்மையான நோக்கத்தை கூறுகின்றான்.
அமிர்த கலசத்துடன் கருடன்
கருடனின் வீரம், மற்றும் தாய் பாசத்தைக் கண்டு மகிழ்ச்சி கொண்ட இந்திரன் அவனை மெச்சி அமிர்தத்தை கருடனுக்கு தந்து அனுப்புகின்றான். ஆணவத்தால் அறிவிழந்த சிற்றன்னையிடம் அமிர்தத்தை அளித்து தன் தாயின் அடிமைத்தனத்தை நீக்கி தன்னை பெற்றவளின் வயிற்றை குளிரச் செய்கின்றான் கருடன். அன்று முதல் சிற்றன்னைக்கு துனண சென்ற நாகங்கள் எல்லாம் கருடனுக்கு பகைவன் ஆகின்றன. ஆயினும் தனது தமையனான அருணன் வேண்டிக் கொண்டதற்காக நாகங்களைக் கொல்லாமல் அவற்றை எல்லாம் வென்று தன் உடலில் சிரசுமாலை, காதுக் குண்டலங்கள், தோள் மாலை, கை கங்கணம், கால் சிலம்பு என்று ஆபரணமாக அணிந்து கொள்கிறான் கருடன்.
எந்தப் பறவையும் பறக்காத உயரத்தில் பறக்க கூடியது கருடன். எழிலானது, கம்பீரமானது, கருடனது வலிமை, வீரம், பொறுமை, வேகம்,அழகு,கோபம் ஆகியவ்ற்றுக்கு மெச்சி மஹா விஷ்ணு கருடனை தனது வாகனமாக ஆக்கிக் கொள்கின்றான். அன்று முதல் இன்று வரை அந்த விநதை சிறுவன் மேல் ஆரோகணித்து பெருமாள் நினைத்த நொடியில் தன் பக்தர்கள் இருக்கும் இடம் சென்று அவர்கள் துயர் துடைத்து வருகின்றான்.
* * * * * *
சுவாமி வேதாந்த தேசிகருக்கு ஹயக்ரீவ மந்திரத்தை உபதேசித்தவன் கருடன். வேதாந்த தேசிகர் ஔஷத கிரியில் தனது குரு உபதேசித்த கருட மந்திரத்தை உபாசிக்க கருடன் தோன்றி ஹயக்ரீவ மந்திரத்தை உபதேசித்து அர்ச்சா மூர்த்தியான யோக ஹயக்ரீவரையும் அளித்தான்.
ஹயக்ரீவரை உபாசித்து தேசிகர் ஹயக்ரிவர் அருள் பெற்று ஹயக்ரீவ ஸ்தோத்திரம் இயற்றினார். கருடன் மேல் சுவாமி தேசிகர் இரு ஸ்தோத்திரங்கள் இயற்றியுள்ளார். அவையாவன கருட தாண்டகம், கருட பஞசாசத். இவற்றில் கருடனை போற்றி தேசிகர் பாடிய சில போற்றிகள் வைநதேயன் - விந்தையின் குமாரன்.

பக்ஷிராஜன் - வேத ஸ்வரூபன்.
கருத்மான் - அழகிய இறகுகளை உடையவன்.
தார்விகாரி - நாகப்பகையோன்
. பத்ரிநாடா - பறவைகளின் யஜமானன்.
ஆசிவிகாரி - நாகங்களின்(விஷ) பகைவன். காகேந்திரன் - பறவைகளின் அரசன்.
அருண அனந்தரன்- அருணனின் இளையோன்.
பக்ஷிஇந்திரன் - பறவைகளின் அரசன்.

கருட சேவை இன்னும் தொடரும்.........

Monday, January 28, 2008

மோக்ஷமளிக்கும் கருட சேவை

மஹா விஷ்ணுவிற்கு வாகனமாகவும் கொடியாகவும் விளங்குவது கருடன். புள்ளரையன், பக்ஷி ராஜன், நாகப் பகையோன், சுபர்ணன் என்றெல்லாம் அழைக்கப்படும் கருடன் திருவைகுந்தத்தில் எப்போதும் எம்பெருமானுக்கு சேவை செய்து கொண்டிருக்கும் ஒரு நித்ய சூரி. எம்பெருமானை தாங்குவதில் முதன்மையானாவ்ர் எனவே வைணவ சம்பிரதாயத்தில் இவர் பெரிய திருவடி என்றழைக்கப்படுகின்றார். மனித முகத்துடன், பெரிய மீசையுடனும், கருடன் போன்ற அலகுடனும், உடல் முழுவதும் எட்டு நாகங்கள் ஆபரணமாக தரித்து , ஒரு காலை முழங்காலிட்டு மடித்தும் மற்றோரு காலை ஊன்றி அமர்ந்த நிலையில் , இரு கரங்களையும் எம்பெருமானின் திருப்பாதங்களைத் தாங்குவதற்காக நீட்டி பெரிய இறக்கைகளுடன் கருடாழ்வாரின் அழகே ஒரு அழகு.