Showing posts with label வைகுண்ட ஏகாதசி. Show all posts
Showing posts with label வைகுண்ட ஏகாதசி. Show all posts

Thursday, February 26, 2009

வைகுண்ட ஏகாதசி கருட சேவை

அமிர்த கலச கருடன்

வைகுண்ட ஏகாதசி சமயத்தின் போது திருவரங்கம் சென்று பெரிய பெருமளையும் நம்பெருமாளையும் சேவிக்கும் பாக்கியத்தை பெருமாள் அளித்தார் அப்போது நெடிதுயர்ந்து அமர்ந்த கோலத்தில் இருக்கும் கருடாழ்வாரையும் மற்றும் அமிர்த கலச கருடனையும் சேவிக்கும் பாக்கியமும் கிட்டியது, இப்பதிவில் அமிர்த கலச கருடனையும் மற்றும் வைகுண்ட ஏகாதசியன்று பெருமாள் அளித்த கருட சேவையும் காணலாம் அன்பர்களே.
முதலில் பெரிய பெருமாளை நமஸ்கரிப்போம்


காவேரி விரஜாஸேயம் வைகுண்டம் ரங்கமந்திரம் |
ஸவாஸு தேவோ ரங்கேஸ: ப்ரத்யக்ஷம் பரமம் பதம் |
விமானம் ப்ரணவாகாரம் வேதஸ்ருங்கம் மஹாத்புதம் |
ஸ்ரீரங்க ஸாயி பகவான் ப்ரணவார்த்த ப்ரகாஸ: ||

அநேகமாக எல்லா விஷ்ணு ஆலயங்களிலும் பெரிய திருவடியை நின்ற கோலத்தில் பெருமாளை வழிபடும் காலத்திலேயே சேவிப்போம். ஆனால் இங்கு திருவரங்கத்தில் அவர் அமர்ந்த கோலத்தில் காணப்படுகிறார் அதற்கு காரணம் என்ன தெரியமா?

பெருமாள் வைகுண்டத்தை விட்டு நாம் எல்லோரும் உய்ய காவேரியின் நடுவே வந்து கோவில் கொண்டு விட்டதால் இனி எங்கும் செல்லவேண்டிய அவசியமில்லை எனவே கருடா தயாராக நிற்க வேண்டாம், அமர்ந்தே இரு என்று பெருமாள் பணித்ததால் அமர்ந்து சேவை சாதிப்பதாக ஐதீகம். ப்ராணாவாகார விமானத்தை வைகுண்டத்திலிருந்து பூலோகத்திற்கு கொண்டு வந்தது கருடன் தானே. என்ன பிரம்மாண்டம் கருட பகவானின் மூர்த்தம், அற்புதமாக அமைந்துள்ளது, புகைப்படம் எடுக்கமுடியவில்லை, திருவரங்கம் செல்லும் போது தரிசித்து கொள்ளுங்கள் அன்பர்களே.

 
இந்த சன்னதி கருடன் தவிர மேலும் அமிர்த கலச கருடன் சன்னதியும் உள்ளது திருவரங்கத்தில், தன் தாயின் அடிமைத்தளையை நீக்க கருடன் தேவாலோகம் சென்று இந்திரனை வென்று அமிர்த கலசம் கொண்டு வந்த கதையை அனைவரும் அறிவோம். அந்த அமிர்த கலசம் தாங்கியவனாகவும் பல் வேறு தலங்களில் சேவை சாதிக்கின்றார் வேத சொரூபனான கருடன் இதோ ஸ்ரீரங்கத்தில் அருள் பாலிக்கும் அமிர்த கலச கருடன்.

வலமேற்கரத்தில் அமிர்த கலசமும் இடமேற்கரத்தில் நாகமும் ஏந்தி அஞ்சலி ஹஸ்தத்துடன் அருமையாக சேவை சாதிக்கின்றார் வைநதேயன்.
கருடாய நமஸ்துப்யம் நமஸ்தே பக்ஷீணாம் பதே |
ந போகமாதி ராஜாய ஸுபர்ணாய நமோ நம : |
விநதா தந்த ரூபாய கச்ய பஸ்ய ஸுதாசய |
அஹீநாம் வைரிணே துப்யம் விஷ்ணு பத்ராய தே நம: | |

ரக்தரூபாய தே பக்ஷீந் ஸ்வேதமஸ்தக பூஜிதே |
அம்ருதா ஹரணே ஹ்ருஷ்ட தஸ்மை தேவாய தே நம: ||

என்று ஸ்ரீ கருட பகவானை அவருக்குரிய மாலை நேரத்தில் விளக்கேற்றி அர்ச்சனை செய்து தியானிக்க நற்பலன்களும் நற்செய்திகளும் கிட்டும்.

ஸ்ரீ கருட பகவானை தினமும் வழிபட கிடைக்கும் நன்மைகள்
ஞாயிறு : பாவங்கள் குறையும், மனக்குழப்பம் தீரும், திருமணத்தடைகள் விலகும்.
திங்கள், செவ்வாய் : குடும்பத்தில் ஏற்படும் குழப்பங்கள் குறையும், பகைவர்கள் மறைந்து போவார்கள்.
புதன், வியாழன் : காரிய சித்தி, எடுத்த காரியத்தில் வெற்றி நிச்சயம்.
வெள்ளி, சனி : கொடிய நோய்கள் மறையும், ஆயுள் வளரும், ஆர்வமும் நம்பிக்கையும் வளரும்.

கருடனின் கதையை ஒரு கல்லிலே கலை வண்ணம் கண்டோம் என்ற தளத்தில் விஜய் என்னுமொரு அன்பர் இப்படி கூறியுள்ளார் அதையும் சென்று பாருங்களேன். கருடனின் கதை

இனி வைகுண்ட ஏகாதசி கருட சேவையை கண்டு களியுங்கள் அன்பர்களே.

திருமயிலை ஆதி கேசவப் பெருமாள் வெள்ளி கருட சேவை

பின்னழகு

பேயாழ்வார்

கருடாழ்வார்
********************
திருமயிலை வேதாந்த தேசிகர் தேவஸ்தானம் ஸ்ரீநிவாசப் பெருமாள் கருட சேவை